தமிழ் தேசியத்தலைவரின் சிந்தனைகள்


தமிழிழ(தமிழ் ) தேசியத்தலைவரின் சிந்தனைகள் போராட்டம்
மக்கள் விடுதலை குறித்தே அமைந்திருந்த போதும்
எல்லோருக்கும் பொருந்த கூடிய , சில அரிய சிந்தனைகள்
இதோ



மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு அவர்களது
கஷ்டங்களை போக்குவதற்கு திட்டமிட்டு செயலாற்றுவதுதான்
உண்மையான அரசியல் வேலை த்திட்டம்.


ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன் அனால்
உயிரிலும் உன்னதமானது எமது உரிமை ,எமது சுகந்திரம் ,
எமது கௌரவம்.

பயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு ,கோழைத்தனத்தின்
தோழன் ,உறுதியின் எதிரி , மனித பயங்களுக்கெல்லாம்
மூலமானது மரண பயம் இந்த மரண பயத்தை கொன்று
விடுபவன் தான் தன்னை வென்று விடுகிறான் .

சொல்லுக்கு முன்னே எப்போதும் செயல் இருக்க வேண்டும் .

நான் பெரிது நீபெரிது  என்று வாழாமல் நாடு பெரிதென்று
வாழுங்கள் . நாடு நமக்கு பெரிதானால் நாம் எல்லோரும்
அதற்கு சிறியவர்களே ,எமது நிலையற்ற வாழ்விலும்
பார்க்க நாட்டின் வாழ்வே பெரியது .

உழைப்பவனே பொருளுலகை படைக்கிறான் மனித
வாழ்க்கையின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்கிறான் .

பிடிச்சிருக்க பிடிக்கல்லையா சொல்லிட்டு போங்கப்பா
Share
Share